பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக ‘சாதிக்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது.
மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு பற்றிய பயத்தை போக்க மக்கள் தொலைக்காட்சி சாதிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம், மைண்ட் பிரஸ் கீர்த்தன்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியுடன், ஆனந்தம் அமைப்பு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கினர்.
தேர்வு பயத்தை போக்கவும், தேர்வு எழுதும் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வினை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி இது ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Post a Comment