கொஞ்ச நாளாக தலைகாட்டாமலிருந்த இயக்குநர் அர்ஜூன், ஒரு இடைவெளிக்குப் பிறகு வெளியில் வருகிறார்... தனது பத்தாவது படத்தை இயக்குகிறார்!
நடிகராக மட்டுமல்ல... ஒரு இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் ஆக்ஷன் கிங் எனப்படும் அர்ஜூன். தேசபக்திப் படங்கள், காதல், குடும்பப் படங்கள் என விதவிதமாக ஆக்ஷன் கலந்து கொடுத்தவர்.
தனது கேரியர் டல்லடித்த நேரத்தில், அதை சரிசெய்ய 1992-ல் இவர் இயக்கிய முதல் படம் சேவகன். அதில் இவர்தான் ஹீரோ. படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதாப் படத்தை இயக்கினார். பரவாயில்லை எனும் அளவுக்குப் போனது.
1994-ல் இவர் இயக்கிய ஜெய் ஹிந்த் பெரும் வெற்றி பெற்றது. இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் மதராஸி எனும் படத்தை தமிழ் - தெலுங்கில் இயக்கினார்.
அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.
இப்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக ஒரு படம் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிஎம் - காமன் மேன் எனத் தலைப்பு வைத்துள்ளார்.
இந்த ஆண்டு அர்ஜூன் நடித்த படங்கள் கடல் மற்றும் வனயுத்தம். வணிக ரீதியாக இவை சரியாகப் போகவில்லை. இப்போது மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் மூன்று ஹீரோக்களுள் ஒருவராக நடித்து வருகிறார்.
Post a Comment