மும்பை: பாலிவுட்டின் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.
2000 ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா. பாலிவுட்டின் மிகப் பிரபல நடிகை. 30 வயதாகும் அவர், மொகித் ரெய்னா என்ற டிவி நடிகரை மணக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
மொகித் ரெய்னா இந்தியில் பிரபலமான டி.வி. நடிகர். இவரை தெரியாத இந்தி ரசிகர்களே இல்லை. நிறைய புராண தொடர்களில் நடித்துள்ளார். மகாதேவ் தொடரில் சிவனாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பெற்றவர்.
பிரியங்கா சோப்ராவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். தற்போது கைவசமுள்ள 5 படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம் ப்ரியங்கா.
இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை. கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு டிவி நடிகரை மணந்து கொள்ள சம்மதித்திருப்பது பரபரப்புச் செய்தியாகியுள்ளது.
Post a Comment