கீரிப்புள்ள என்ற படம் இந்த வாரம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வரும் முன்பே நேற்று அதன் திருட்டு விசிடிகள் வெளியாகி திரையுலகை அதிர வைத்துள்ளது.
நடிகர் யுவன் - திஷா பாண்டே நடித்து நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் கீரிப்புள்ள. இந்தப் படத்தை திரைக்கு கொண்டுவரும் முன்னரே அதன் திருட்டு விசிடி மற்றும் டிவிடிகள் வெளியாகிவிட்டன. படத்தை சில இணையதளங்களும் வெளியிட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைமில் புகார் கொடுத்தார்.
உடனடியாக படம் வெளியாகியிருந்த 16 இனையதளங்களிலும் தடை செய்து விட்டனர். ஆனால் திருட்டு விசிடி மட்டும் தாராளமாகக் கிடைக்கிறது.
வேறு வழியில்லாமல் பெரோஸ்கான், யுவன் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து எல்லா ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு டிவிடிகளை கைப்பற்றி அழித்தனர்.
இது பற்றி பெரோஸ்கான் கூறுகையில், "கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே... சட்டத்தாலும் போலீசாலும் கூட தடுக்க முடியாத கொடுமையாக மாறி வருகிறது இந்த திருட்டு விசிடி பிரச்சினை," என்றார்.
Post a Comment