மலேசியாவிற்கு பயணிக்கும் நாதஸ்வரம் … திடீர் திருப்பங்கள்

|

Sun Tv Nadaswaram Family Move Malaysia

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடரில் மலேசியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

திரு பிக்சர்ஸ் திருமுருகன் இயக்கி நடிக்கும் நாதஸ்வரம் தொடர் காரைக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சில வாரங்களில் ஊட்டி, பெங்களூர் என்று பயணித்த இந்த தொடர் தற்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. உள்ளது.

கதைப்படி நாதஸ்வரம் வாசிக்க வந்த அழைப்பை சொக்கலிங்கம் குடும்பம் ஏற்கிறது. அதற்காக சொக்கலிங்கமும் கோபியும் மலேசியாவுக்கு தங்கள் குழுவினருடன் பயணப்பட வேண்டும். இந்த பயணத்தில் தன்மனைவி மலரை எப்படியாவது அழைத்துப் போய் விடலாம் என கோபி முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அந்த முயற்சியை தன் சாமர்த்தியத்தால் தடுத்து விடுகிறாள் கோபியின் தாயார். இதற்கு கோபியின் சகோதரியும் உடந்தையாக இருக்கிறாள்.

இந்த விசயம் மலேசியா போனபின்புதான் கோபிக்கு தெரிய வருகிறது. அம்மாவுக்கு மலேசியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. இதனால் அம்மாவின் அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோபி தன் அம்மா மலேசியா வர எற்பாடு செய்கிறான்.

மலேசியாவில் தான் கோபியின் குடும்பத்திற்குள் அதுவரை நிகழாத ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காணாமல் போன கோபியின் அண்ணனை கோபி அங்கே தான் சந்திக்கிறான். இதில் முக்கியமான விஷயம், கோபிக்கு அவர் தான் தன் அண்ணன் என்பது தெரியாது. அண்ணனுக்கும் அதே நிலை தான்.

யாரென்று தெரியாமலே அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். திருப்பமான இந்த காட்சியில் அடுத்தடுத்து சந்திப்பு தொடரும்போதாவது அவர்கள் அண்ணன்-தம்பி தான் என்பதை தெரிந்து கொண்டார்களா? அதற்கான வாய்ப்பு அமைந்ததா? என்பதுதான் சுவாரஸ்யம்.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விறு விறுப்பான காட்சிகளை தொடரின் இயக்குனர் திருமுருகன் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

கோபியின் அண்ணன் வருகைக்குப் பிறகு தொடர் இன்னொரு கோணத்தில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டு தொடர்கிறது என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன்.

 

Post a Comment