கடல் படம் சரியாகப் போகாவிட்டாலும், அதில் நாயகனாக அறிமுகமான கவுதம் கார்த்திக்கு நிறைய வாய்ப்புகள். அப்படி ஒரு வாய்ப்பு ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து வந்திருக்கிறது.
ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் 3. தனுஷ் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல், அந்தப் படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டியைக் கொடுத்துவிட்டது.
ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை. அதே நேரம், ஐஸ்வர்யாவுக்கு இயக்குநர் என்ற அங்கீகாரத்தையும் தரத் தவறவில்லை. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாவுக்கு சிறப்பு விருது தரப்பட்டது.
தனது அடுத்த படம் குறித்து எதையும் அறிவிக்காமலிருந்த ஐஸ்வர்யா, சில கதைகளுக்கு பக்காவாக ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் மகன் கவுதம் கார்த்தியை வைத்து அடுத்த படம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் கவுதமை அழைத்து இதுகுறித்துப் பேசியுள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லையாம்.
Post a Comment