மும்பை: எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் , பிரியங்கா சோப்ராவை புகழ்ந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில், இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது. விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் சிறந்து விளங்குவதற்காக பிரியங்கா சோப்ராவிற்கும் விருது தரப்பட்டது.
பின்னர், பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்‘ என்றார்.
பிரியங்கா சோப்ரா நல்ல பாடகியும் கூட என்பது பலருக்குத் தெரியாது. ஒரு ஷோலோ ஆல்பத்தை அவரே பாடி வெளியிட்டுள்ளார்.
Post a Comment