அஜீத் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய பட தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அஜீத்தை வைத்து பிரமாண்டமாக புதிய படத்தைத் தயாரிக்கிறது பாரம்பரியம் மிக்க விஜயா புரொடக்ஷன் நிறுவனம்.
இந்தப் படத்தை சிறுத்தை படம் இயக்கிய சிவா இயக்குகிறார். இப் படத்தின் துவக்க விழா ஏப்ரல் முதல் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் அஜீத் குமார் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் படத்தின் துவக்க விழாவை தள்ளிவைத்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பதில், 5-ம் தேதி படத்தின் தொடக்க விழாவும், தொடர்ந்து படப்பிடிப்பும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் முடிந்ததும் காலில் அறுவைச் சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருப்பதால் சில மாதங்களுக்கு புதிய படத்தில் நடிக்க மாட்டார் அஜீத்.
Post a Comment