சத்தியம் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி உரக்கச் சொல்கிறோம். சமூகப் பார்வையுள்ள இந்த நிகழ்ச்சி ஞாயிறு தோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் பிரச்சினைகளை மெதுவாகச் சொல்வதை விட உரக்கச் சொன்னால்தான் உலகிற்கு புரியவரும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உள்ளது. இந்நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் எதுவும் கற்பனையல்ல.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தகுந்த விமர்சனங்களுடன் நிகழ்ச்சி தயாராகியுள்ளது. பொதுமக்களின் குரலாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், அரசியல் தொட்டு அடித்தட்டு மக்கள் வரை, பின்னிக் கிடக்கும் பிரச்சினைகள் எடுத்து வரப்படுகின்றன. மறுக்கப்பட்ட உரிமைகள் - மறைக்கப்பட்ட உண்மைகள் என தேடித் தேடி சேகரித்து இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள். உரக்கச் சொல்வோம் நிகழ்ச்சியை இயக்கி தொகுத்து வழங்குகிறார் சுந்தர்.
Post a Comment