சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவில் விடுதலையாகிவிடுவார். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
+ comments + 1 comments
who need this guy, his look was so wired.....
Post a Comment