நடிகை ரேவதி- சுரேஷ் மேனன் விவாகரத்து

|

Actress Revathi Get Divorce

நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

Post a Comment