சென்னை: ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க வரவில்லை என்றால் நடிகை அஞ்சலி மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் இருந்து மாயமானார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் தங்கியவர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னை சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் கொடுமைபடுத்துவதாக தெரிவித்தரா்.
ஆனால் தான் அஞ்சலியை கொடுமைப்படுத்தவில்லை என்றும், அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னுடன் ஜோடி சேர்ந்துள்ள ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் களஞ்சியம் தெரிவித்தார். அஞ்சலி தனக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தான் சென்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மாயமான அஞ்சலி 5 நாட்கள் கழித்து ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார். தற்போது அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக் பட ஷூட்டிங்கிற்காக புனே சென்றுள்ளார். நேற்றில் இருந்து 5 நாட்கள் களஞ்சியத்திற்கு கால்ஷீட் கொடுத்த அஞ்சலி ஷூட்டிங்கிற்கு வரவில்லை.
இது குறித்து களஞ்சியம் கூறுகையில்,
அஞ்சலி ஊர் சுற்றி புராணம் படத்தில் 10 நாட்கள் நடித்தார். மீண்டும் 23ம் தேதியில் இருந்து 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வரவில்லை. அஞ்சலி ஒப்புக்கொண்டபடி என் படத்தில் நடித்து முடிக்காவிட்டால் அவர் மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்றார்.
Post a Comment