சென்னை: இயக்குனர் ஹரி சிங்கம் 2 படத்தை முடித்துவிட்டு கார்த்தியை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறாராம்.
ஹரி சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் சிங்கம் 2 படப்பிடிப்பில் ரொம்பவே பிசியாக உள்ளார். சிங்கம் ஹிட்டானதை அடுத்து அவர் சிங்கம் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அண்மையில் மாயமாகி திரும்பி வந்த அஞ்சலி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி யாரை இயக்கப் போகிறாரோ என்று நினைத்தால் கடைசியில் அவர் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவையில் படமாக்கப்படுகிறதாம்.
வரிசையாக டாடா சுமோ கார்கள், அரிவாள்கள் என ஹரியின் படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் இதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment