மும்பை: பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை திருமணம் செய்யப் போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று நடிகை சுஷ்மிதா சென் கூறினார்.
வாசிம் அக்ரமுக்கும், இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் வாசிம் அக்ரமை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆரம்பத்தில் அமைதி காத்த சுஷ்மிதா சென், இப்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:
வாசிம் அக்ரமை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. முட்டாள்தனமான ஒன்று. வாசிம் அக்ரம் எப்போதுமே எனக்கு நல்ல நண்பர். இது மாதிரியான வதந்திகள் எங்களுக்கு அவமானமாகவும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன," என்றார்.
வாசிம் அக்ரமும் இந்த தகவலை மறுத்துள்ளார்.
Post a Comment