சென்னை: நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை.
காலையில் உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டுமே. அதன் பிறகு சில சீனியர் நடிகைகள் வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
பிற்பகலில் நடிகை நமீதா, மோனிகா, லட்சுமி ராய் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் காலையிலேயே வருவதாகக் கூறிய கமல், பின்னர் 12 மணிக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவர் மாலையில்தான் உண்ணாவிரதத்துக்கு வந்தார்.
Post a Comment