எவ்வளவோ எதிர்ப்பு வந்தும் தன் பெயருக்குப் பின் போட்டுக் கொண்டிருக்கும் அய்யர் என்ற பட்டத்தை விட்டுத் தர முடியாது என்று மறுத்துவிட்ட ஜனனிக்கு இப்போது புதிதாக காதல் முளைத்துள்ளதாம்.
அவரது காதலுக்கு இலக்காகியிருப்பவர் 'பரதேசி' ஹீரோ அதர்வா.
‘அவன் இவன்' ‘பாகன்' படங்களில் நடித்துவிட்டு, ஓய்வாக இருப்பதால், அதர்வாவை லவ்வுகிறாராம் அம்மணி.
ஜனனி அய்யரும் அதர்வாவும் இணைந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், நண்பர் ஒருவர் மூலம் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
‘முப்பொழுதும் உன் கற்பனைகள் படப்பிடிப்பிலிருந்தே இந்தக் காதல் தொடர்கிறதாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம் நிலைமை.
விஷயம் தெரிந்ததும், "இப்போதான் பாலா எனும் உருப்படியான இயக்குநர் கையில் போய் பெரிய ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி சகவாசம் கேரியரை சாய்த்துவிடப் போகிறது,' என்று அட்வைஸ் பண்ணாராம் அதர்வாவின் அம்மா. கேட்கிற வயசா இது!
Post a Comment