3 படத்தைத் தொடர்ந்து, எதிர்நீச்சலிலும் அனிருத்தின் பாடல்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. விளைவு பெரிய இயக்குநர்கள் பலரும் அனிருத்தின் கால்ஷீட் கேட்டு அணிவகுத்து வருகின்றனர்.
இயக்குநர் கவுதம் மேனன் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள அனிருத், அடுத்து எல்ரெட் குமார் தனது ஆர் எஸ் இன்போடைன்மென்ட் மூலம் தயாரித்து இயக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.
எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்போது தனது பார்ட்னர் ஜெயராமனுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் காதல் படமான இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக அனிருத்துக்கு பெரிய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன்வசந்தம், இப்போது யான் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது ஆர் எஸ் இன்போடைன்மென்ட்.
Post a Comment