சென்னை: இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித்.
ஏற்கெனவே பேசப்பட்ட ஹீரோயினான பார்வதி ஓமணக்குட்டன் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்குப் பதில் மீனாட்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலி ராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. தலைப்பு மகா நீளம். கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைத்துள்ளனர்.
இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'போட்டா போட்டி' படத்தை டைரக்டு செய்தவர்.
வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள். அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று முதலில் கூறிய பார்வதி, பின்னர் 1.5 கோடி வரை சம்பம் கேட்டாராம்.
இவர் ஏற்கனவே அஜீத்துடன் 'பில்லா 2' என்ற ப்ளாப் படத்தில் நடித்து காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தேர்வாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் கடைசியாக இயக்கி நடித்த விருத்தகிரி படத்தில் நடித்துள்ளார்.
ஒருவழியாக விஜயகாந்த் நாயகிதான் வடிவேலுவுக்கு செட்டாகியுள்ளார்!!
Post a Comment