மரியான் படத்தில் ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். அந்தப் பாடலுக்கு ரஹ்மான் இசையமைக்க யுவன் பாடியுள்ளார்.
திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவரை ரஹ்மான்தான்.
இந்த நிலையில் யுவனைப் பாட அழைத்தது ஏன் என நேற்று நடந்த மரியான் பிரஸ் மீட்டில் விளக்கினார் ஏஆர் ரஹ்மான்.
அவர் கூறுகையில், "தனுஷ், யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் கூட்டணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரியானில் வரும் கடல் ராசா நான் பாட்டை நான்தான் பாடினேன். ஆனால் தனுஷுக்கு அது செட் ஆகவில்லை. அப்போதுதான் யுவனை பாட அழைத்தேன். அந்தப் பாடலுக்கு அவர் குரல் மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது," என்றார்.
மரியான் படப் பாடல்கள் அனைத்துமே வந்த வேகத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இதில் ஏஆர் ரஹ்மான், தனுஷ், பார்வதி, இயக்குநர் பரத்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+ comments + 1 comments
super la
Post a Comment