சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்க்கிறார்கள் என்று பேச்சு அடிபட்ட நிலையில் அவர் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
சிம்புவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சிம்பு சம்மதத்துடன் பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. அவருக்கு வேலூரில் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் அவரைப் பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சிம்புவிடம் அண்ணா, உங்களுக்கு கல்யாணம் எப்பொழுது என்று கேட்டுள்ளார்.
அதற்கு சிம்பு அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரகசிய திருமணமா அல்லது பெண்ணை முடிவு செய்து விட்டீர்களா?
பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு தற்போது ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment