திசையன்விளை: மத்தாப்பு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் புது நடிகர் ஜெயனை, அவரது சொந்த ஊரில் காவல்துறை அதிகாரிகள் தாக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாகிராமத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் தினந்தோறும் நாகராஜன் இயக்கும் மத்தாப்பு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நாலந்துலாகிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
தனது நண்பர்களை காரில் அழைத்து செல்வதற்காக திசையன்விளை பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றார். அப்போது அங்கு ரோந்து வந்த திசையன்விளை காவல்துறையினர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஜெயனுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஜெயனை சரமாரி தாக்கி அவரது காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனராம்.
இந்நிலையில் நேற்று ஜெயன் தன்னை காவல்துறை அதிகாரி தாக்கியதாக கூறி பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் ஜெயனின் தந்தை சுடலைக்கண்ராஜா தனது உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திசையன்விளை ஏ.எஸ்.பி. வருண்குமார் எனது மகனை எந்தவித காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏ.எஸ்.பி. வருண்குமார் மீது ஏற்கெனவே பலதரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். அப்பகு வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இப்போது நடிகரைத் தாக்கிய வழக்கு மூலம் ஏஎஸ்பி சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
Post a Comment