கோபிசந்த் - ரேஷ்மா திருமணம்.. தெலுங்கு திரையுலகம் வாழ்த்து!

|

Gopichand Weds Reshma

ஹைதராபாத்: பிரல தெலுங்கு நடிகரும், தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவருமான கோபிசந்துக்கு நேற்று திருமணம் நடந்தது. ஹைதராபாதைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணை அவர் மணந்தார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கோபிசந்த். நடிகை பாவனாவுடன் அவருக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் ரேஷ்மாவுடன் கடந்த டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தள்ளிப் போனது. இப்போது ரேஷ்மா என்ற பெண்ணை மணந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இன்னொரு முக்கிய நடிகரான மேகா ஸ்ரீகாந்தின் உறவுக்காரப் பெண் இந்த ரேஷ்மா.

ஹைதராபாதில் வெகு ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பவன் கல்யாண், பிரபாஸ், டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா, இயக்குநர்கள் ராகவேந்திரராவ், ராமோஜி ராவ், எஸ்எஸ் ராஜமவுலி,

திருமணம் முடிந்ததும் நடந்த கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

 

Post a Comment