ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்

|

Rajini Timely Advice Anirudh

சென்னை: நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்துமாறு கொலவெறி புகழ் அனிருத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.
ஒல்லிக் குச்சியாக இருக்கும் அவரிடம் யாரோ தனுஷ் மாதிரி நீங்களும் பெரிய ஹீரோவாகலாம் என்று தூபம் போட்டுள்ளார். உடனே அவருக்கு ஹீரோ ஆசை வந்து சான்ஸ் தேட ஆரம்பித்தார். இந்நிலையில் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு பட நிறுவனம் முன்வந்துள்ளது. கதை விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.

பெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்க நடையாக நடந்து அலுத்துப் போன இயக்குனர்களின் பார்வையும் அனிருத் பக்கம் திரும்பியிருக்கிறது. இது குறித்த தகவல் காத்து வாக்கில் ரஜினியின் காதுகளுக்கு சென்றது. அவர் உடனே அனிருத்தை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.

அவர் அனிருத்திடம் கூறியதாவது,

திரையுலகில் நம் ஆசையை விட சினிமா நம்மை எந்த பாதையில் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். சினிமா உன்னை இசைப் பாதையில் அழைத்துச் செல்கையில் நீ வேறு பாதையில் போக ஆசைப்படுகிறாய். இது உன் எதிர்காலத்தை வீணடித்துவிடும்.

நடிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் மனதை அலைபாயவிடாமல் இசையில் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு இருக்கும் திறமைக்கு நீ பெரிய இசையமைப்பாளர் ஆவாய் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த அறிவுரை அனிருத்துக்கு பிடிக்காவிட்டாலும் அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளாராம். அதனால் நடிக்கலாமா, இல்லை இசையோடு நின்று கொள்ளலாமா என்று அனிருத் தீவிர யோசனையில் உள்ளாராம்.

 

Post a Comment