ராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு!

|

Tms Ashes Strewn Rameshwaram Ocean

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் டிஎம் சவுந்திரராஜனின் அஸ்தி, ராமேஸ்வரம் கடலில் நேற்று கரைக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட உலகின் பிரபல பின்னணி சாதனைப் பாடகர், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தர்ராஜன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை விட்டு சென்றுள்ள டி.எம்.எஸ். உடலுக்கு உலகத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையை சேர்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் சென்னையில் வசித்தாலும், அவருக்கு மதுரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனி ரசிகர் மன்றமே வைத்துள்ளனர் டிஎம்எஸ்ஸுக்காக.

இந்த ரசிகர்கள் டி.எம்.எஸ். அஸ்தியை ராமேசுவரத்தில் கரைப்பதற்காக மதுரை கொண்டு வந்தனர். இந்த அஸ்தி கலசத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்ட டி.எம்.எஸ். அஸ்தியை அவரது மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அக்னி தீர்த்த கடலில் அஸ்தி கரைக்கப்பட்டது.

அஸ்தி ஊர்வலத்தில் மதுரை சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment