காவ்யா மாதவனுக்காக மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தாரா நடிகர் திலீப்?

|

திருவனந்தபுரம்: தன் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த செய்திகளை நடிகர் திலீப் மறுத்துள்ளார்.

மஞ்சுவாரியர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர். மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலீப்புக்கும் காதல் மலர்ந்தது. 1998-ல் திருமணம் செய்து கொண்டனர்.

கொச்சியில் தனிக்குடித்தனம் துவங்கினார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு மஞ்சு வாரியர் முழுமையாக ஒதுங்கிவிட்டார். அமைதியாகப் போன அவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களாக திலீப்பும் மஞ்சுவாரியரும் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இருவரும் இப்போது பிரிந்து விட்டதாகவும் தனித்தனி வீடுகளில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. மஞ்சுவாரியரை திலீப் விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்குக் காரணம், கணவனை விவாகரத்து செய்துவிட்டு இப்போது திலீப்புடன் நெருக்கம் காட்டி வரும் காவ்யா மாதவன்தான் என்று கூறப்படுகிறது.

actor dileep divorces wife manju warrior

இதற்கிடையே, நீண்ட நாளாக இருந்து வரும் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திலீப்.

அவர் கூறுகையில், "மஞ்சுவாரியரை விவகாரத்து செய்ததாக வதந்திகள் பரப்பியுள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். அதை வைத்து பிரிந்து விட்டதாக கருதக் கூடாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள திலீப், அது நிரந்தர பிரிவல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 

Post a Comment