சாந்தனு பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: காவல் ஆணையரிடம் புகார்

|

Fake Facebook Id My Name Santhanu

சென்னை: சாந்தனு என்ற தன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு மோசடிச் செயல்கள் அரங்கேறி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையரிடம் சாந்தனு பாக்யராஜ் இன்று புகார் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் சித்து பிளஸ் டூ, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களின் மூலம் பிரபலம் ஆனார்.

இன்று சென்னை காவல் ஆணையரைச் சந்தித்த, சாந்தனு புகார் மனு ஒன்றைக் அளித்தார். அதில், அவர் ரியாஸ் என்பவரைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், புகாரில் சாந்தனு கூறியுள்ளதாவது...

'என் பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றைத் துவக்கி, அதன் மூலம் மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசச் செய்தி அனுப்புவது, பணம் வசூல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் இப்புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Post a Comment