வரும் ஜூன் 21-ம் தேதி தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒரே நாளில் தனுஷ் நடித்த மரியான் மற்றும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா ஆகியவை ரிலீஸாகின்றன.
மரியான் படத்தை பரத்பாலா இயக்கியுள்ளார். நாயகியாக பார்வதி நடித்துள்ளார். ஒரு மீனவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
தனுஷ் முதன் முதலில் இந்தியில் நடித்துள்ள படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். இதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை.
இதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பாகி வெளியாகிறது. ஒரு வகையில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகின்றன.
தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இது மிகப் பெரிய விஷயமாகும். இந்தப் படங்கள் அனைத்துக்குமே இசை ஏ ஆர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றிக் கொடி நாட்டிய தனுஷ், இந்தியிலும் அதே வெற்றியைப் பெறுவாரா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்!
Post a Comment