ட்விட்டரில் ரசிகர்களைச் 'சந்தித்த' விஜய்!

|

ட்விட்டரில் ரசிகர்களைச் 'சந்தித்த' விஜய்!

சென்னை: முதல் முறையாக தனது பிறந்த நாளன்று ட்விட்டரில் ரசிகர்களைச் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து பெற்றார் நடிகர் விஜய்.

இன்று 39 வயது பூர்த்தியாகும் விஜய், தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடவில்லை.

ஜில்லா ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவர், பின்னர் 30 நிமிடங்கள் ட்விட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தார். தனக்காக வாழ்த்துக் கூறிய நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ட்வீட்களுக்கு நன்றி கூறினார். பல ட்வீட்களை மறுட்வீட் செய்தார்.

தனது தலைவா பட இசை மற்றும் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று அவர் ரசிகர்களின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டார் என்றும், மாலை நீலாங்கரையில் உள்ள தனது கடற்கரை மாளிகையில் தனக்கு வேண்டப்பட்ட நண்பர்களுக்கு மட்டும் விருந்து அளிப்பார் என்று விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

 

Post a Comment