தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

|

சென்னை: பிரியா ஆனந்துக்கு காதல் ஆசை வந்துவிட்டது.

படத்தில் ஹீரோக்களை காதலிப்பது போன்று நடிக்கும் பிரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்கும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

வாமனன் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த என்னை காதல் காட்சியில் நடிக்கக் கூறினார். காதலி கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்று தான் கூற வேண்டும்.

தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்து கொண்டேன். ஆனால் திரையில் காதலிப்பது போன்று நடிக்க மட்டுமே முடியும். நிஜத்தில் மனதுக்கு பிடித்த ஒருவரை காதலிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

நடிப்பில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லை. ஆனாலும் கதாலர் என்று ஒருவர் வரும்போது ஆசை தீர அவரை காதலிப்பேன். பல ஆண்டுகள் காதலித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன். தொழில் அதிபரை மணக்கும் எண்ணம் இல்லை. சக நடிகராக இருந்தாலும் மனதுக்கு பிடித்தவராக இருந்தால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

 

Post a Comment