யாரிடமும் வாய்ப்பு தேடி போக மாட்டேன்... நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன் - சினேகா

|

யாரிடமும் வாய்ப்பு தேடி போக மாட்டேன்... நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன் - சினேகா

சென்னை: வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் போக மாட்டேன், ஆனால் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன், என்கிறார் நடிகை சினேகா.

பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சினேகா. ஆனால் முன்பு மாதிரி நிறைய படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதே நேரம் நடிப்புக்கு முழுக்குப் போடும் திட்டமும் இல்லை என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அதன் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானது.

எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வர வேண்டும். வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி நிற்கமாட்டேன்," என்றார்.

 

Post a Comment