மும்பை: அவ்வப்போது சேர்ந்து, பிரியும் காதல் ஜோடியான பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பிர் கபூரும், கத்ரீனா கைஃபும் இரவு நேரத்தில் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தீபிகா படுகோனேவை காதலித்து பிரிந்தார். அதன் பிறகு கத்ரீனா கைஃபை காதலித்து அவரையும் பிரிந்தார். ஆனால் ரன்பிர், கத்ரீனா ஜோடி அவ்வப்போது பிரிவதும், சேர்வதுமாக உள்ளது. தற்போது அவர்கள் மீண்டும் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் மெலனி ஈஸ்டன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இரவு நேரத்தில் ரன்பீரும், கத்ரீனா கைஃபும் பாலி ஹில் பகுதியில் ரிக்ஷா ஓட்டுவதாக ஒரு ரிக்ஷாக்காரர் தெரிவித்தார். கத்ரீனா ரிக்ஷா ஓட்டுகையில் அவரை போலீசார் நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினார்களாம் என்று தெரிவித்துள்ளார்.
இது ரிக்ஷாக்காரர் கூறிய தகவல் என்பதால் அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை என்று மெலனி தெரிவித்துள்ளார்.
Post a Comment