பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் தகுதி கிடைக்குமாம்: சொல்கிறார் சுசி கணேசன்!

|

பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் தகுதி கிடைக்குமாம்: சொல்கிறார் சுசி கணேசன்!

மும்பை: பாலிவுட்டில் படம் இயக்கினால்தான் இந்திய டைரக்டர் என்ற தகுதி என கிடைக்கும் கோலிவுட்டா தமிழ் சினிமா உலகில் இருந்து மும்பைக்கு போய் குடியேறிய சுசி கணேசன் கருத்து உதிர்த்திருக்கிறார்.

தமிழில் கந்தசாமி, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசிகணேசன் பாலிவுட்டுக்காக மும்பையில் குடியேறிவிட்டார். தமது திருட்டு பயலேவை லேசாக மாற்றி ஹிந்தியில் ஷார்ட்கட் ரோமியோ படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது.

இதையொட்டி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் இணைய தளத்தில் சுசிகணேசனுடனான சாட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் கேள்விக்கே தடாலடியாக பதிலளித்தார் சுசிகணேசன். "பாலிவுட்டில் படம் எடுத்தால்தான் "இந்திய இயக்குநர்" என்ற அங்கீகாரம் கிடைக்கும். 100 தமிழ் திரைப்படம் எடுத்தாலும் தென்னிந்திய தமிழ் இயக்குநர் என்றுதான் சொல்லப்படுவோம். அதனால் பாலிவுட்டுக்கு வந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

இன்னும் 5 ஆண்டுகாலத்துக்குள் அதாவது ‘இந்திய இயக்குநர்" அடையாளத்தை எட்டிவிடுவேன் என்றும் சொல்லி இருக்கிறார் சுசி கணேசன்.

மேலும் திருட்டு பயலே படத்தை விட 10 மடங்கு சூப்பரா இருக்கிறதாம் ஹிந்தி படைப்பான ஷார்ட்கட் ரோமியா என்று தமது மனைவி, தயாரிப்பாளர் எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டனராம். என்று அந்த சாட்டிங்கில் தமக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார் சுசி கணேசன்.

இந்திய இயக்குநர் அடையாளம் தேடி தஞ்சம் அடைந்திருக்கிறீர்கள்...அப்படித்தான் பேசுவீங்க

 

Post a Comment