நினைத்தது யாரோ.. படம் பார்த்து உற்சாகமான தயாரிப்பாளர்கள்!

|

தொடர்ந்து வெற்றிப் படங்களையும் வெள்ளி விழாப் படங்களையும் தந்த இயக்குநர் விக்ரமன், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உருவாக்கியுள்ள படம் நினைத்தது யாரோ.

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது படம் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் இமானுவேல் ஆகியோர், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.

நினைத்தது யாரோ.. படம் பார்த்து உற்சாகமான தயாரிப்பாளர்கள்!

அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், "விக்ரமன் மிக அருமையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இனி புதுப் புது இயக்குநர்களை வைத்து படங்கள் தயாரிக்க பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது நினைத்தது யாரோ படம்," என்றனர்.

இப்போது சசிதரன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கின்றனர் ரமேஷும் இமானுவேலும்.

அடுத்து இரண்டு புதிய இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Post a Comment