சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

|

சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

ஹைதராபாத்: உத்தரகண்ட் வெள்ளம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வழக்கம் போல் வில்லங்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றால் சர்ச்சைக்கு அவ்வளவு பிரியம். அவரும், சர்ச்சையும் இணை பிரியா இரட்டைப் பிறவிகள் போன்று. அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் எதையாவது அவர் கூற அது பெரும் சர்ச்சையாகிவிடும்.

இந்நிலையில் அவர் உத்தரகண்ட் வெள்ளம் பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் இருந்து கடவுள்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியவில்லை என்றால் பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment