மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா: யாராவது நல்ல ரோல் வச்சிருக்கீங்களா?

|

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா: யாராவது நல்ல ரோல் வச்சிருக்கீங்களா?

சென்னை: திருமணத்திற்கு பிறகு கணவன், குழந்தைகள் என்று செட்டிலான ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்.

சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகா திரையுலகிற்கு டாடா காட்டிவிட்டு வீட்டில் உட்கார்ந்துவிட்டார். தியா, தேவ் ஆகிய 2 குழந்தைகளின் தாயான அவர் சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிவது ஜோவுக்கு ஆச்சரியமாக உள்ளதாம்.

டிவி, பத்திரிக்கைகள் என்று சினேகா, பிரசன்னா ஜோடியாக வர என்னங்க நாமும் இவ்வாறு நடித்திருந்திருக்கலாமே என்று ஜோ சொல்ல இனிமேல் நடித்தால் போச்சு என்று சூர்யா தெரிவித்துள்ளாராம்.

தான் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதை ஜோ கூற சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம். ஹரிதாஸ் சினேகா கதாபாத்திரம், இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் ஜோ நடிக்க ரெடியாம்.

 

Post a Comment