சென்னை: லக்ஷ்மி மேனன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்தி பரவுகிறது. ஆனால் இதை அவரது தாயார் மறுத்துள்ளார்.
சுந்தர பாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் லகஷ்மி மேனன். அவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் லக்ஷ்மி 85 சதவீத மதிப்பெண்கள்
வாங்கி தேர்ச்சி பெற்றார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார் என்ற செய்தி பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்ததாக செய்தி பரவுகிறது.
இது குறித்து லக்ஷ்மி மேனனின் தாய் கூறுகையில்,
என் மகள் தேர்வில் தோல்வி அடையவில்லை. பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.
+ comments + 1 comments
Romba avasiyam.
Post a Comment