சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா வருமா வராதா என விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கிசுகிசுத்துவரும் நிலையில், படத்துக்கு முதல் சிக்கல் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார் தயாரிப்பாளர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைவா படம் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்துக்கு யு ஏ சான்று அளித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் சொல்லவில்லை.
இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டிக்கு இந்தப் படத்தை அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.
சமீபத்தில் மரியான் படமும் இதே போல ரிவைசிங் கமிட்டிக்குப் போய் யுஏவை யுவாக மாற்றியது நினைவிருக்கலாம்.
ஏற்கெனவே தலைவா படம் குறித்து மர்மமான முணுமுணுப்புகள் இருந்து வரும் நிலையில், இப்போது சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது படத்தை 9-ம் தேதி எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் தியேட்டர்காரர்கள்தான்.
Post a Comment