படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

|

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

சென்னை: ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்து சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தை அடுத்து கார்த்தியின் அருவா எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4 மாதங்களில் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 1 comments

Anonymous
30 July 2013 at 11:46

Hari must direct vijay. Unfortunately he is in the camp of surya family and he is therefore unable to reach the peak.

Post a Comment