இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

|

இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

சென்னை: கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய தினம் நடிகை மரணம், இயக்குநர் தற்கொலை போன்ற செய்திகள்தான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது. மதிய நேரத்தில் கனகா மரணச் செய்தி பரபரப்பானது. பின்னர் கனகாவே ஊடகங்களின் முன்பு தோன்றி பேசி தெளிவு படுத்தினார்.

அதேபோல் கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக மாலை நாளிதழ்கள், சில தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி ஒளிபரப்பானது.

இந்த செய்தியைப் பார்த்துப் பதறிப் போன கபிலன், நம்மைத் தொடர்பு கொண்டு, நாளிதழ்களில் தவறான செய்தியைப் போட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது நான் சென்னையில்தான் இருக்கிறேன். கலைந்த கனவுகள் படப்பிடிப்பு லொகேசன் பார்ப்பதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் புதன்கிழமையன்று நாமக்கல் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 8ல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இயக்குநர் கபிலன் தெரிவித்தார். இதுபோன்ற தவறான செய்திகளைப் போடுவதன் மூலம் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அவர் கூறினார்.

மறைந்த நடிகர் கே.ஏ. தங்கவேலுவின் பேரன் அஸ்வின் அறிமுகமாகும் படம் கலைந்த கனவுகள் என்பது நினைவிருக்கலாம்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

Post a Comment