குழந்தைகளை வைத்து தன் முதல் படத்தையே வெற்றிப் படமாக்கிய அந்த பாண்டிய மன்ன இயக்குநர், தனது புதுப்படத்தில் நடிக்க சுள்ளானிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தார். இயக்குநரின் முன்னாள் படங்கள் மூன்றும் பட்டையைக் கிளப்பி ஓடியதால் சுள்ளானும் ஓகே சொல்லி இருந்தார்.
இந்நிலையில் தான் சுள்ளானின் சூப்பர் படமொன்று தமிழிலும், ஹிந்தியிலும் ஹிட்டடிக்க, ஹீரோவின் கண்கள் வடக்குப் பக்கமே பார்த்த வண்ணம் உள்ளதாம். பற்றாக்குறைக்கு சோப்பு, சீப்பு விளம்பரங்கள் வேறு...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன இயக்குநர், தனது ‘பழைய' ஹீரோவிடமே போய் விட்டாராம். வரும் நவம்பரில் புதுப்பட அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post a Comment