சென்னை: விமானிகளின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டுக்குள் நடிகை நித்யா மேனன் உட்கார்ந்திருந்தது குற்றம். எனவே அவரிடம் விசாரணை நடத்தி, குற்றத்துக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்கப் போவதாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பிரபல மலையாள நடிகை நித்யா மேனன், தமிழில் 180-ல் அறிமுகமானார்.
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, 'மாலினி 22, பாளையங்கோட்டை' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பறந்த அவர், விமானம் எப்படிப் பறக்கிறது என்று பார்க்க ஆசையாக உள்ளது," என்று விமானிகளிடம் கூறியுள்ளார்.
நடிகை ஆயிற்றே... உடனே தாராளமா வாங்க என்று அழைத்து விமானிகள் அமரும் இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
விமான போக்குவரத்து விதிகளின்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. அது சட்டப்பட்டி குற்றமாகும். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரில் சம்பந்தப்பட்ட இரு விமானிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர்.
அடுத்து நித்யா மேனனையும் விசாரிக்கின்றனர். நித்யாமேனன் விமானிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தது குற்றம் என்பதால், அவருக்கு தண்டனை வழங்க பரிந்துரைக்கப் போவதாக விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment