ஊரெல்லாம் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், ரகசியமா குடும்பமே நடத்துறாங்கன்னு பேச்சா கிடக்கு. ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது.
ஆர்யாவுடன் ரொம்ம்ப்ப நெருக்கமாக இருப்பது அனுஷ்காதான் என்கிறார்கள். இரண்டாம் உலகம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவரும் தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில்.
இரண்டாம் உலகம் படம் முடிந்த பிறகும் கூட, இருவரும் மிக நெருக்கமாக உள்ளார்களாம்.
சமீபத்தில் நடந்த சிங்கம் 2 வெற்றி விழா பார்ட்டிக்கு ஹைதராபாதிலிருந்து ஜோடியாகவே வந்த அனுஷ்காவும் ஆர்யாவும் விடியும் வரை விருந்தில் இருந்துவிட்டு, விடியலில் ஜோடியாகவே புறப்பட்டார்களாம்.
அதுமட்டுமல்ல, ருத்ரமாதேவி படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சிக்குப் போன அனுஷ்காவுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்தாராம் ஆர்யா.
இப்படி பல கதைகளை ஆந்திர திரையுலகப் பத்திரிகைகளும் இணையதளங்களும் தொகுத்து வெளியிட்டு வருகின்றன.
நெசமா பொய்யா என்பது சம்பந்தப்பட்டவர்கள் ஜோடி மாற்றும்வரை தெரியப் போவதில்லை!
Post a Comment