இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்

|

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்

சென்னை: சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் சாதனையாளர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாரூக்கான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய சினிமா தொடங்கி நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இதற்கான விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட்டின் சாதனை நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேரு உள் விளையாட்டரங்கில், மூன்று நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்களுக்கம் நேரில் அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கும், இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத் திரைத்துறையினருக்கும், மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிலிம்சேம்பர் தலைவர் சி கல்யாண் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment