சென்னை: அஜீத் குமார் ஒரு சிறந்த மனிதர் என்று கண் மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
அஜீத் குமாரை அவருடன் பணிபுரிபவர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர். அவர் நேர்மையானவர், நல்லவர் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் டிவி சேனல் ஒன்று அஜீத் குமாரின் நண்பரான கண் மருத்துவர் விஜய் சங்கரை பேட்டி கண்டது.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,
அஜீத் ஒரு சிறந்த மனிதர். அவர் மிகவும் நல்லவர். அவர் எப்பொழுதும் வரிசையில் நின்று தான் மருத்துவரை சந்திப்பார். தான் ஒரு ஸ்டார் என்பதால் முந்திக் கொண்டு வர மாட்டார். தனக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவே மாட்டார் என்றார்.
முன்னதாக அஜீத் வாக்களிக்கும்போது வரிசையில் நின்று வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
Unmai teriyama pesuranga pa
Post a Comment