மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருத்தீனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் தயாரிக்கவிருக்கிறார் ஏக்தா கபூர்.
பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயாரித்தார் ஏக்தா. இந்நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை வந்துள்ளது.
இதையடுத்து அவர் படத்தை எடுக்க அசாருத்தீனிடம் அனுமதி வாங்கி பெரிய தொகையையும் அவருக்கு கொடுத்துள்ளாராம். மேலும் திரைக்கதை எழுதும் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.
இது தவிர அசாராக நடிக்க வைக்க 3 ஹீரோக்களை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி. ஆனால் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டாலும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கமுக்கமாக உள்ளார் ஏக்தா. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே துவங்கவிருக்கிறதாம்.
Post a Comment