இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கை (விஜய் பிஆர்ஓ பிடி செல்வகுமார் அனுப்பியுள்ள அறிக்கை, வரிக்கு வரி அப்படியே தருகிறோம்):
"தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.
கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார். -பிடி செல்வகுமார், விஜய் பிஆர்ஓ.
Post a Comment