சென்னை: சின் சேச்சி போன்று பாலிவுட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று மில்க் நடிகை விரும்புகிறாராம்.
மில்க் நடிகை நடித்த முதல் படம் சர்ச்சையாகிவிட்டாலும் பறவை பெயரில் வந்த படம் அவருக்கு கோலிவுட்டில் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து அவர் தமிழோடு சேர்த்து தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
லீடர் படம் பிரச்சனைகளைத் தாண்டி வெளியானதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். இந்நிலையில் அவர் நடித்த தெலுங்கு படம் ஒன்று சூப்பர் ஹிட்டானதில் அம்மணி குஷியாக இருக்கிறார். அந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்தியில் வெளியாவதால் இதன் மூலம் பாலிவுட் போகிறோமே என்று நடிகைக்கு மகிழ்ச்சி.
சின் சேச்சி போன்று தானும் பாலிவுட்டில் நுழைய இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறாரம். பாலிவுட்டில் இருந்து நல்ல பாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்கிறாராம் மில்க் நடிகை.
சின் சேச்சி பாலிவுட் போய் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகிறார். பாவம் அவர் முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் மில்க் வேறா?
Post a Comment