சென்னை: ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தலைவா ரிலீஸாகுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் நாளை ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ரிலீஸாவதில் உறுதியாக உள்ளது.
இந்த ரம்ஜான் பண்டிகை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று கருதப்பட்டது. தெலுங்கில் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி, தமிழில் விஜய்யின் தலைவா மற்றும் இந்தியில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ரம்ஜான் அன்று ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் மோதும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆந்திராவில் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதை எதித்து நடந்து வரும் போராட்டங்களால் பவனின் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைவா படத்திற்கு திடீர் என்று நேற்று சிக்கல் உருவாகியது. சாதாரண சிக்கல் என்று நினைத்தால் அது என்னவென்றால் இடியாப்ப சிக்கலாக உள்ளது.
இதனால் நாளை தலைவா ரிலீஸாகுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் நிச்சயமாக உறுதியாக நாளை ரிலீஸாவது சென்னை எக்ஸ்பிரஸ் மட்டுமே.
+ comments + 1 comments
manamketta tamilnadu.tamilanuku illa aana,,,,,
Post a Comment