சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

|

சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் தலைவா பட பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை நேற்று முதல் போலீஸ் உதவியுடன் அகற்றி வருகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள்.

விஜய் நடிக்கும் தலைவா படம் இன்று ரம்ஜான் ஸ்பெஷலாக வரவிருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் படம் வெளிவரவில்லை. படத்துக்கு இன்னும் வரிவிலக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

தியேட்டர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பதால் யாரும் படத்தை வெளியிட விரும்பவில்லை.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

ஆனால் உலகில் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியாகும் நாடுகளில் தலைவா வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தலைவா படத்துக்காக தனியார் இடங்களில் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பெரிய அளவில் கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவற்றை வைக்க மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்

இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் தலை படம் தொடர்பான அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன. போலீஸ் துணையுடன் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த தலைவா பேனர்கள் அகற்றம்
 

+ comments + 1 comments

9 August 2013 at 16:53

அரசியல் " TAMILNADU ".

Post a Comment