தலைவா ரிலீஸ் ஆகலைனா, குண்டு வைப்பேன்...: ‘திருட்டு’ போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்

|

தலைவா ரிலீஸ் ஆகலைனா, குண்டு வைப்பேன்...: ‘திருட்டு’ போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்

சென்னை: தலைவா படத்தை உடனடியாக திரையிட வேண்டும், தாமதப்படுத்தினால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்பேன் என மிரட்டிய மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வரத் தயாராக உள்ள திரைப்படம் ‘தலைவா'. கடந்த வெள்ளியன்றே, ரம்ஜானை ஒட்டி திரைக்கு வரவேண்டிய தலைவா சில பல காரணங்களால் ரிலீசாகவில்லை.

முதலில், படத்தை திரையிட்டாக் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது படத்தை வெளியிட தாமதப்படுத்தினால் தியேட்டருக்கு குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார் ஒரு மர்மநபர்.

சென்னை உதயம் தியேட்டருக்கு நேற்று முந்தினம் வந்த தொலைபேசி அழைப்பில், ‘ தலைவா படத்தை வெளியிட தாமதம் ஆனால், தியேட்டருக்கு குண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளான் மர்ம நபர் ஒருவன். பிரகு மீண்டும் அவனே போலீசைத் தொடர்பு கொண்டு கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாகக் அச்சுறுத்தியுள்ளான்.

சென்னை உதயம் தியேட்டரிலும், சென்னை கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாக அடுத்தடுத்து வந்த மர்மப் போனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்மபோன் வந்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆராய்ந்தபோது, அது மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போன வடபழனியைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்ந்து வரும் மிரட்டல்களால் தியேட்டர் அதிபர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு தரப்பினர் படத்தை படத்தை வெளியிடக்கோரியும், மற்றொரு தரப்பினர் படத்தை வெளியிடக்கூடாது எனவும் மாறி, மாறி வரும் மிரட்டல்களால் குழப்பத்தில் உள்ளனர் தியேட்டர் முதலாளிகள்.

 

+ comments + 1 comments

Anonymous
13 August 2013 at 21:55

Ipo yena seiya poringada koothiyangala.olunga padatha release pannunga illa........avalo tha

Post a Comment